சென்னையில் ஓட்டல்களில் சாப்பிட போறவங்களுக்கு ஷாக் நியூஸ்.. அடியோடு மாறப்போகும் விலை
சென்னை: சென்னையில் மளிகை பொருட்கள், காய்கறி விலை கடுமையாக உயர்ந்துளளதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளார்கள். இனி ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை இப்போது உள்ளதை விட 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக தக்காளி விலை தாறுமாறாக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) விலை 200 ரூபாயை தாண்டிவிட்டது. இது தவிர இஞ்சி மற்றும் பூண்டின் விலையும் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது.

இது தவிர சீரகம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு விலையும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இப்படி மளிகை பொருட்கள் விலையும், காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் பொதுமக்கள் வழக்கத்தைவிட குறைந்தது 1000 ரூபாய் வரை மாதம் பட்ஜெட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் எனில், ஓட்டல் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களும் இந்த கடுமையான விலை உயர்வால் அவதிப்பட்டு வருகிறார்கள். விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் கொடுத்தால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.
தொடர்ந்து விலை அதிகரித்தபடியே இருப்பதால் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே மின்சாரத்திற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மின் கட்டணத்தை ஒரே மாதிரி வசூலிக்க வேண்டும் என்றும் காய்கறியை சேமித்து வைக்கும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து, தற்போது உள்ள தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications