அரசு பங்களாக்களை காலி செய்த முன்னாள் அமைச்சர்கள்... விரைவில் குடியேறும் புதிய அமைச்சர்கள்..!
சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான பங்களாக்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர்.
சென்னையில் பசுமை வழிச்சாலை எனப்படும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு என 76 அரசு பங்களாக்கள் இருக்கின்றன. இந்த பங்களாக்களை பொதுப்பணித்துறையினர் நிர்வகித்து வருகின்றனர்.
எந்தவொரு மராமத்து பணிகளாக இருந்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை உடனடியாக அரசு செலவில் சீரமைத்து கொடுப்பார்கள்.

சகல வசதிகள்
குறிஞ்சி, முல்லை, பொதிகை, வைகை, என ஒவ்வொரு பங்களாவுக்கு தனி தனிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாக்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 5,000 சதுர அடியிலாவது இருக்கும். பரந்து விரிந்து விசாலமான காற்றோட்டத்துடன் பங்களாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். மின்சாரம், குடிநீர், தொலைபேசி என சகல விதமான வசதிகளும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்.

பொதுப்பணித்துறை
இதில் சபாநாயகருக்கு ஒதுக்கப்படும் பங்களா மட்டும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமானதாக இருக்கும். இப்படி பல வசதிகளை கொண்ட பங்களாக்களை காலி செய்ய யாருக்கு தான் மனம் வரும். இருப்பினும் வேறுவழியில்லாமல் பொதுப்பணித்துறை அறிவுறுத்தலை ஏற்று முன்னாள் அமைச்சர்கள் பலரும் இரவோடு இரவாக தங்கள் உடமைகளை அங்கிருந்து எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

விதிவிலக்கு
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டும் இன்னும் தங்கள் பங்களாக்களை காலி செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தற்போது குடியிருக்கும் அரசு பங்களாவிலேயே எடப்பாடி பழனிசாமி தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், துணை முதலமைச்சராக இருந்ததால் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் 3 மாதம் காலஅவகாசம் தரப்படும் எனத் தெரிகிறது.

புதிய வண்ணம்
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் காலி செய்துள்ள பங்களாக்களில் புதிய வண்ணம் பூசுதல் உள்ளிட்ட மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் விரைவில் அங்கு புதிய அமைச்சர்கள் குடியேறவுள்ளார்கள். இதற்காக இப்போதே வீடு பார்க்கும் படலமும் தொடங்கியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications