Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞரும் எடப்பாடியும் ஒன்னா? சரித்திரத்த திருப்பி பாருங்க! ‘இதுதான்’ நல்லது.. கேசி பழனிசாமி ஐடியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை கலைஞருடன் ஒப்பிடுவது தவறு எனவும், 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும் , அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

KC Palanisamy AIADMK Edappadi Palaniswami

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணிகளாகவும் கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டனர், அதிமுக தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.


அதேபோல இத்தனை நாள் கட்சிக்காக தான் ஒதுங்கி இருந்தேன் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலாவும் அறிக்கை விட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் யாருக்கும் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் சிலர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கும் நிலையில் அதனையும் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.

KC Palanisamy AIADMK Edappadi Palaniswami

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும் , அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் திமுக ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

KC Palanisamy AIADMK Edappadi Palaniswami

ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமியை கலைஞருடன் ஒப்பிட்டு " பல தோல்விகளை கண்டபிறகும் வென்றார்" என்று கூறுகிறார்கள். அந்த ஒப்பீடு தவறு. அண்ணா மறைந்த பிறகு 1969-ல் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1971 சட்டமன்ற தேர்தலில் அவர் தலைமையிலான அன்றைய திமுக வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அப்போதையை முதலமைச்சராக இருந்த அம்மா ( ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்று அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கலைஞர் அவர்கள் 1977 - 1987 வரை வனவாசம் சென்றுவிட்டார்.

அதே போல தான் ஸ்டாலின் அவர்களுக்கும் 2011 - 2021 வரை ஒப்பிடுகிறார்கள். அந்த இரண்டிலும் 8 முறை அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். அதன் பிறகு வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை 10 தோல்விகளை பெற்றிருக்கிறார். குறைந்தபட்சம் 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும், அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+