சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்
சென்னை ; சென்னையில் இருந்தால் மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்ததால செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று மிகப்பெரிய உச்சமாக ஒரே நாளில் 26,465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 197 பேர் மரணம் அடைந்தனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக உச்சத்தை எட்டியுள்ளது.

கடுமையாக உயர்வு
சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6738 பேர் பாதிக்கப்பட்டனர்.இதேபோல் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.

14 நாட்கள்
இந்த மோசமான சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மே 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள தென்மாவட்ட மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பரனூர் டோல்கேட்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்திலுமே வாகனங்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருந்தது. இன்றும் நாளையும் ஊரடங்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கூட்டம் இன்றும் நாளையும் இன்னமும் அதிகரிக்கும் என தெரிகிறது.

விருப்பம் ஏன்
ஏனெனில் நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்ககத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு போடப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களில் இருப்பதை விரும்புகின்றனர். இதன் காரணமாக பயணிகள் கூட்டம் சென்னையில் அலைமோதுகிறது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications