Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் ஹோட்டல் ரகசியம்! ஆணின் “கிசுகிசு”.. பாஜகவுக்கு ரிஸ்க்! அண்ணாமலை பதவியின்றி வரட்டும் - காயத்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதவி இல்லாமல் வந்து தன்னை எதிர்கொள்ளட்டும் என்றும், துபாய் ஓட்டல் விவகாரம் குறித்து பேசியதற்காக தான் அவதூறு வழக்கு தொடர்ந்தால் பாஜகவை பணயம் வைப்பதாகும் எனவும் அக்கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.

பாஜகவில் நிர்வாகியாக இருந்த திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபாண்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் ஆகியோர் இடையிலான ஆடியோ விவகாரத்தில் பகிரங்க விமர்சனத்தை முன்வைத்ததை தொடர்ந்து அண்ணாமலையில் 6 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டவர் காயத்ரி ரகுராம்.

அதை தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகம் மீது அண்ணாமலை மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து விமர்சனங்களை காயத்ரி ரகுராம் சுமத்தி வருகிறார். தொடர்ந்து ட்விட்டரிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

துபாய் ஹோட்டல்

துபாய் ஹோட்டல்

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், "முதலில் நான் சென்னை சோமர்செட் ஹோட்டலில் ஒருவரை சந்தித்ததாக தவறான தகவலை சொல்லி என்னை குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்தார்கள். தற்போது துபாய் ஹோட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். அமைதியாகவே நான் இருந்துவிடப் போகிறேன். அண்ணாமலையே இதற்கு பதில் சொல்வார்

குடும்ப பெண்கள்

குடும்ப பெண்கள்

எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பற்றி அண்ணாமலை எதுவும் பேசவில்லை என்பதே அதற்கு காரணம். எனது பெயரை அண்ணாமலை வேறு எங்கும் பயன்படுத்தவில்லை என மக்கள் நினைத்துக் வருகிறார்கள்.

150 பேர் பங்கேற்ற கூட்டம்

150 பேர் பங்கேற்ற கூட்டம்

ஆனால், என் பெயரை 150 பேர் இருந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அவ்வாறு ஏன் அண்ணாமலை பேசினார்? எதன் அடிப்படையில் அப்படி அவர் பேசலாம்? என்று நான் அவரிடம் கேட்கபோவது கிடையாது. நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், என் சார்பாக எனது மாநில தலைவர் அண்ணாமலை மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்." என என்றார்.

காயத்ரி ரகுராம் பதில்

காயத்ரி ரகுராம் பதில்

இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு நபர், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராமிடம், துபாய் வீடியோவை வைத்து உங்களை மிரட்டும் அண்ணாமலை மீது நீங்கள் ஏன் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதனை ரீட்வீட் செய்து உள்ள காயத்ரி ரகுராம் தன்னுடைய விளக்கத்தில் வழங்கி இருக்கிறார்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

அதில், "என் தந்தை உயிருடன் இருந்திருக்க வேண்டும்.. கட்சியின் தலைவராக முழு அதிகாரம் கொண்டு என் குணத்தை மோசமாக பேசினார். நான் அவதூறு வழக்கு தொடர்ந்தால் என் பாஜக கட்சியை பணயம் வைக்கிறேன் ஆனால் இது தவறு பாஜக மீது அல்ல. இது ஒரு பெண்ணின் மீது ஒரு தனி நபர் ஆணின் கடுமையான கிசுகிசு வார்த்தைகள். மக்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

அண்ணாமலை பதவியின்றி எதிர்கொள்ளட்டும்

அண்ணாமலை பதவியின்றி எதிர்கொள்ளட்டும்

எனக்கு இல்லை, என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். எந்த தலைவனும் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசினால் அதை எந்த கடவுளும் ஏற்க மாட்டார்கள் அல்லது எந்த தமிழ்நாட்டு மக்களும் ஏற்க மாட்டார்கள். இடைநீக்கத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. நான் மீண்டும் போராடுவேன். அவரும் பவர் போஸ்டிங் இல்லாமல் வந்து என்னை எதிர்கொள்ளட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+