"க்ளைமேக்ஸ்".. ஓபிஎஸ்ஸை தேடிய அந்த கண்கள்.. உற்றுப்பார்த்த மோடி.. டக்கென திரும்பிய வாசன்.. தமாகா-வா?
ஜிகே வாசனின் தமாகா விரைவில் பாஜகவில் இணையலாம் என்கிறார்கள்
சென்னை: பாஜகவுடன் குறிப்பாக பிரதமர் மோடியின் பிரியத்துக்கும், பாசத்துக்கும் ஆளான 2 தலைவர்கள் பற்றின செய்திகள்தான் தமிழக அரசியல் களத்தை உஷ்ணமாக்கி கொண்டிருக்கிறது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்திலும் தேர்தல் முனைப்புகள் தென்பட துவங்கிவிட்டன.
இதில், அதிமுகவை பொறுத்தவரை, இன்னும் பஞ்சாயத்து முடியவில்லை.. கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.. தேர்தல் ஆணையமும் இதுகுறித்த இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

நொந்து நூடுல்ஸ்
அதிமுகவே இன்று 4 அணிகளாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.. இவர்களின் மோதலை பார்த்துவிட்டு நொந்துபோன நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், பாஜக, திமுக என மாற்று கட்சிகளுக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும், தங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது என்றாலும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் உள்ளார்.. தொடர்ந்து பிடிவாதமாகவும் இருந்து வருகிறார்.. கடந்த வாரம் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தும்கூட, அந்த அழைப்பை துணிச்சலுடன் மறுத்து தன் பிடிவாதத்தை, மேலிடத்துக்கு மேலும் தெரியப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

காவி தலைவர்
இந்த விழாவுக்கு ஓபிஎஸ்ஸும் அழைக்கப்பட்டிருந்தார்.. முழு "காவி தலைவராக" உருவெடுத்த ஓபிஎஸ்ஸை, அன்றைய தினம் காண முடிந்தது.. அப்போது, பாஜக தலைவர் நட்டாவுடன் சில விஷயங்களை ஓபிஎஸ் பேசியதாகவும் தெரிகிறது.. இந்த விழா பற்றின இன்னொரு தகவல்தான் இப்போது கசிந்து வருகிறது.. இந்த பதவியேற்பு விழாவின்போது, முதல் வரிசையில பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் உட்கார்ந்திருந்தனர். இவர்களுக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு, அங்கே ஓபிஎஸ் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட மோடி, ஓபிஎஸ்ஸையும் முதல் வரிசையில் உட்கார வையுங்கள் என்று அதிகாரிகளிடம் சொன்னாராம்.

ஜிகே வாசன்
அதற்கு பிறகுதான், ஓபிஎஸ்ஸை முன்வரிசையில் அழைத்து வந்து உட்கார வைத்துள்ளனர்.. விழா முடிந்ததுமே, பிரதமரை வழியனுப்ப, மற்ற மாநில முதல்வர்கள் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தபோது, அந்த வரிசையில் நம் ஜிகே வாசனும் நின்றிருந்தாராம்.. அப்போதும் ஓபிஎஸ் எங்கே என்று மோடி கேட்க, வாசன் பின்னாடி திரும்பி பார்த்திருக்கார்.. பிரதமர் மறுபடியும் நம்மை தேடுவதை அறிந்த ஓபிஎஸ், வேகவேகமாக அவரே முன்வந்து பிரதமரிடம் நின்றிருக்கிறார்.. அப்போது ஓபிஎஸ்ஸை நலம் விசாரித்துவிட்டு, பிரதமர் கிளம்பி சென்றுவிட்டாராம்.. இந்த இரு நிகழ்வுகளும் ஓபிஎஸ்ஸை குஷியில் ஆழ்த்தி வருகிறதாம்.

மூப்பனார்
எடப்பாடி பழனிசாமிக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியிடம்தான் தற்சமயம் பெரும்பாலான கட்சி, கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எவ்வளவுதான், தனக்கு சிக்கல்கள், நெருக்கடிகள் இருந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதுணையுடன் இருந்து வருகிறார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. ஒற்றை தலைமை விவகாரத்தை ஏற்காமல், பிடிவாதமாக ஏற்காமல், பாஜகவை எதிர்க்கவும், தவிர்க்கவும் எடப்பாடி துணிந்துவிட்டார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல், பாஜகவால் தமிழகத்தில் களம் காண முடியாது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.

வாசன் வாசன்
இவ்வளவு இருந்தும், நிர்வாகிகள் ஆதரவை அவ்வளவாக பெறாத ஓபிஎஸ்ஸை ஏன் இன்னமும் மேலிட தலைவர்கள் விடாமல் வைத்துள்ளனர், அதிமுக விவகாரத்தில் என்னதான் முடிவில் உள்ளனர் என்பதெல்லாம் தெரியாமல் தொண்டர்கள் குழம்பி போயுள்ளனராம்.. மேற்கண்ட குஜராத் நிகழ்வு என்றில்லாமல், ஜிகே வாசனிடம் பிரதமர் எப்போதுமே அன்பாக பழகுவார்.. வாசனை பொருத்தவரை மிகவும் மென்மையானவர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

டீசன்ட் டிமாண்ட்
தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார்.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை இருக்கிறது. பிரதமர் மோடியின் அபிமானத்தை பெற்றிருந்தாலும், தனக்கான பதவி, பொறுப்பு வேண்டும் என்று வாசன் இதுவரை நிர்ப்பந்தித்தது கிடையாது. ஆனால், சில கணிப்புகள் அரசியல் களத்தில் எழுந்தன.. ஒருவேளை வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படுமா? அல்லது தமாகாவை கலைத்துவிட்டு, கூண்டோடு பாஜக பக்கம் சாய போகிறாரா என்றெல்லாம் சலசலக்கப்பட்டது..

கூண்டோடு காலி
அப்படி எதுவுமே நடக்கவில்லை..இன்றுவரை வாசன் மீதான மரியாதையும் அப்படியேதான் தலைவர்களுக்கு இருக்கிறது என்றாலும், வரும் தேர்தலில் பாஜகவுடன் தமாகா போடும் கூட்டணி கணக்கும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இங்கு ஏற்படுத்தி வருகிறது.. தமாகாவை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கக்கூடும் என்று இந்த முறையும் சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.. வாசன் விஷயத்தில் பாஜக என்ன செய்ய போகிறது? வாசன் என்ன செய்ய போகிறார்?.. பார்ப்போம்..!!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications