ஹைக் 54%? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்..அகவிலைப்படி சம்பளமும் உயர்கிறது.. இன்று அறிவிப்பு?
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக உயர போகிறது.. இன்றைய தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று, மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களின் இந்த சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும். அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை வருடத்துக்கு 2 முறை உயர்த்துவது வழக்கமாகும்.. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்த அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று கூட்டம்: எப்போதுமே, ஜனவரி மாத சம்பள உயர்வு மார்ச் மாதத்தில்தான் அறிவிக்கப்படும்... அதேபோல ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வு அக்டோபர் மாதம்தான் அறிவிக்கப்படும்... ஆனால், இப்போது செப்டம்பர் மாதத்திலேயே இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட போவதாக தெரிகிறது. காரணம், இன்று செப்டம்பர் 25ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு கணிசமாக கிடைக்கும்... அத்துடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையும் சேர்த்து கிடைக்கும் என்றே சொல்கிறார்கள்.
அகவிலைப்படி: அதன்படி பார்த்தால், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மொத்த அகவிலைப்படி 53 சதவீதமாக அதிகரிக்கும்... ஒருவேளை, 4 சதவீதம் அதிகரித்தால் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 54 சதவீதமாக உயரும்... இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 அதிகமாகப் பெறுவார். அதாவது, 51,500 ரூபாய் சம்பளம் பெறுவார்.
எப்படி பார்த்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த குட்நியூஸ் வரப்போவதால், ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.
டபுள் மகிழ்ச்சி: 3- 4 சதவீதம் முதல் உயர்வு என்றால், ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படுவது டபுள் தித்திப்பு செய்தியாகும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications