15ஆவது தமிழக சட்டபேரவையை கலைக்க ஆளுநர் உத்தரவு.. எடப்பாடி பழனிசாமி ராஜினாமாவும் ஏற்பு
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அமைக்கச் செயல்படுமாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 234 எம்எல்ஏக்களை கொண்ட தமிழக சட்டசபையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றது 125 கைப்பற்றியுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக 64 இடங்களில் மட்டுமே வென்றது. பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 15வது சட்டப்பேரவையைக் கலைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் இன்னும் சில தினங்களில் திமுக புதிய அரசை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications