Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்..தவிக்கும் 9 லட்சம் மாணவர்கள்..ஆளுநரே காரணம்..பொன்முடி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆளுநர்தான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பட்டமளிப்பு விழா நடைபெறாத காரணத்தால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.

Graduation ceremony delayed in University 9 lakh students suffering Governor is responsible Ponmudi allegation

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என புகார் எழுந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலைகழகத்தில் ஜூன் 16-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. சேலம் பெரியார் பல்கலை.க்கு ஜூன் 28ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு ஜூன் 19ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் பட்டமளிப்பு விழா தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொன்முடி, பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு காரணம் ஆளுநர்தான் என்று கூறினார். மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் திட்டமிடுகிறார். அவர்கள் தேதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது இதனால் தமிழ்நாட்டில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குக் காரணம் தமிழக அரசு கிடையாது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

ஆளுநர் எந்த தேதி கேட்டாலும், அதை நாங்கள் கொடுக்கிறோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் முன்வர வேண்டும். அதற்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+