திமுக VS பாஜக.. திராவிடமாடலுக்கும் தேசியமாடலுக்கு இதுதாங்க வித்தியாசம்.. விளாசி தள்ளிய எச் ராஜா
சென்னை: திமுகவின் திராவிட மாடல் அரசுக்கும், பாஜகவின் தேசிய மாடல் அரசிலுக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது என புள்ளிவிபரங்களை வெளியிட்டு பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழா ஒரு ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினர். சென்னையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

எச் ராஜா விமர்சனம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுகவின் ஆட்சியை முதல் அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் திராவிட மாடல் ஆட்சி என கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் தேசிய மாடல், திராவிட மாடல் அரசுகளுக்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நடந்த மது விற்பனை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா பிரசாரம் ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இதுதான் வித்தியாசம்
‛‛இரண்டு செய்திகள். 1 சுதந்திர தினத்தன்று 5 கோடி பர் மூவர்ணக் கொடியேற்றி செல்பி எடுத்து அனுப்பியுள்ளனர். 2 சுதந்திர தினத்திற்கு முதல் நாள் தமிழகத்தில் 273.5 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தேசியமாடல் அரசுக்கும், திராவிட மாடல் அரசுக்கும உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் மது விற்பனை எவ்வளவு?
அதாவது தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 14ல் ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.55.77 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.53.48 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடி, கோவையில் ரூ.52.29கோடி விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

தேசியக்கொடியுடன் ‛செல்பி’
அதேநேரத்தில் சுதந்திர தினத்தையொட்டி 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை பொதுமக்கள் செய்து தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து மத்திய கலாசார அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றினர். நேற்று மாலை 4 மணி வரை 5 கோடி தேசியக்கொடியுடன் 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த 2 விஷயத்தை தான் குறிப்பிட்டு பாஜகவின் எச் ராஜா தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
-
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications