தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்
சென்னை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 92 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கடந்த 2007 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாகவும்,காவல்துறையினரை தாக்கியதாகவும், லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீது பாண்டிச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான முழுமையான விவரங்கள் இடம் பெறாததால், மீண்டும் விசாரணை நடத்தி புதிதாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
காவல்துறை புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் ஒரு மாதத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், ஒரு மாதமாகியும் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் காணாமல் போய் விட்டதாகவும், மீண்டும் வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டிய நிலைக்கு புதுச்சேரி காவல்துறை தள்ளப்பட்டுள்ளதாகவும், பாண்டிச்சேரி அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்
தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மீண்டும் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை கோருவதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது வீணான கால விரயம் எனவும், அதன் அடிப்படையில், 92 பேர் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications