சென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை
சென்னை: மிக அதிகப்படியாக வெயில் கொளுத்தி வரும் சென்னையில் மின்சாரத்தின் தேவை 3400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நாள் தோறும் சென்னையில் தற்போது 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டி வருவதால், சென்னை நகர மக்கள் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையில் மக்கள் அதிகபட்சமாக 3396 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு கோடை வெயிலின் போது அதிகபட்சமாக 3537 மெகாவாட் மின்சாரம் என்ற அளவுக்கு காணப்பபட்டது,

மின்தேவை அதிகரிப்பு
அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில், கத்தரி வெயில் கொளுத்துவதால் மக்களின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏசி பயன்பாடு
கடந்த இரண்டு வாரங்களாக மின்சாரத்தின் பயன்பாடு உச்சபட்சமாக இருந்துவருகிறது. பொதுவாக மதியம் 1மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்போது மக்கள் வீடுகளிலோ அல்லது அலுவலங்களிலோ இருக்கும் போது ஏசியை முழுவீச்சில் பயன்படுத்துவார்கள்

உச்சபட்சமாக உயர்வு
தற்போது மாலையிலும் ஏசி பயன்படுத்துவதன் காரணமாக மின்சாரத்தின் பயன்பாடு இரவு 7.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை மிக அதிகமாக இருக்கிறது" என்றார்கள்

16151 மெகாவாட்
இதனிடையே மின்சாரத்தின் தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 3000 மெகாவாட்டையும் தாண்டியிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் 16151 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications