Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது- 14 நாள் ஜெயில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர் (தலித்துகள்) உள்ளிட்டோரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும் இந்துத்துவா சொற்பொழிவாளருமான ஆர்பிவிஎஸ் மணியனை சென்னை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்டவைகளை வகித்து தற்போது இந்துத்துவ சித்தாந்தங்களை பரப்புகிற சொற்பொழிவாளராக வலம் வருகிறவர் ஆர்பிவிஎஸ் மணியன். கடந்த சில நாட்களாக ஆர்பிவிஎஸ் மணியன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 Hindutva leader RBVS Manian arrested by Chennai Police

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், பறையர் எவனாவது பள்ளர்ல கல்யாணம் முடிப்பானா? நீங்க எல்லாம் அடிச்சுட்டு நிற்கிறவனுக..
அந்த அம்பேத்கர்தான் கான்ஸ்டிடியூசனை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்கானுக.. பேசிகிட்டு இருக்கானுக.. இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் இதையே சொல்லிகிட்டு இருக்கானுங்க..துதி பாடிகிட்டு இருக்கானுக.

அம்பேத்கர் கிளார்க்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

 Hindutva leader RBVS Manian arrested by Chennai Police

திருவள்ளுவர்: எவனோ ஒருத்தன் திருவள்ளுவர், திருக்குறள்னு சொல்லிப்புட்டான்.. திருவள்ளுவர்னு ஒரு ஆளே கிடையாது. அந்த ஆளு ஒருத்தர் இருந்தார்னு சொல்றது கற்பனை.. அதைவிட அந்த ஆள் திருக்குறளை எழுதினார்னு சொல்றது நல்ல கற்பனை என மிக இழிவாக பேசியிருந்தார். இப்பேச்சுக்காக ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டது. போலீசாரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கைது- சிறை: இதனையடுத்து அம்பேத்கரை இழிவாகப் பேசியதற்காக சென்னையில் உள்ள மாம்பலம் வீட்டில் இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார் ஆர்பிவிஎஸ் மணியன்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+