மொத்தம் 48 வீடு.. சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியை நம்ப வைத்து ஏமாற்றிய கும்பல்.. சென்னையில் என்ன நடந்தது?
சென்னை: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம், வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான சுதீஷ் தேமுதிக துணை பொதுச்செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உள்ளது. அரசியலை தாண்டி சுதீஷ் குடும்பம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது..

இந்நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டித்தருவதாக லேகா சர்மா பில்டர்ஸ் நிறுவனத்தின் சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இரண்டு பேர் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தப்படி கட்டிய வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று ரூ.43 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார்களாம். இது தொடர்பாக சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் இந்த மோசடி சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டித்தருவதாக லேகா சர்மா பில்டர்ஸ் நிறுவனத்தின் சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இரண்டு பேரும் 43 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் இரண்டு பேர் 43 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..












Click it and Unblock the Notifications