தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்.. வாங்கண்ணே பேசிக்கலாம்! இறுதியாய் வந்த அழைப்பு! ஓகே சொன்ன ஓபிஎஸ்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடப்பது 100% உறுதியாகிவிட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் அதில் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மூத்த நிர்வாகி ஒருவர் அழைத்ததாகவும், எதுவாக இருந்தாலும் அங்கே பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதை அடுத்தே ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது.. என்பது போல கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீடித்து வந்த விவகாரங்களும் சர்ச்சைகளுக்கும் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நடக்குமா? நடக்காதா? என்ற பலத்த விவாதங்களை ஏற்படுத்திய அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வேன் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக பொதுக்குழு
முன்னதாக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கும், பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என தொண்டர்களுக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஓபிஎஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் ஆனால் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என இபிஎஸ் தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் ஒப்புதல்
இந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் ஓபிஎஸ்ஸின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானங்களில் இரட்டை தலைமை ஒழிப்பு, ஒற்றை தலைமை தீர்மானங்கள் இல்லாத நிலையில்தான் ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தாலும் ஓபிஎஸ்ஸுடன் ஆலோசித்த பிறகே கொண்டுவரப்படும் என இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் உறுதியளித்தனர் எனவும், இதையடுத்தே அவர் பொதுக்குழுவுக்கு வர சம்மதித்து இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இபிஎஸ்க்கு பெரும்பான்மை
அதேநேரத்தில் பொதுக்குழுவை கூட்டி அதில் பெரும்பான்மை நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதால் ஒற்றை மற்றும் இரட்டை தலைமை குறித்த தீர்மானங்களை வாக்கெடுப்புக்கு கொண்டு வந்து அதனை வெற்றி பெறச்செய்ய எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஒற்றைக்காலில் நின்ற பன்னீர்செல்வம் தற்போது பொதுக்குழுவுக்கு வருவதற்கு சம்மதித்தது எப்படி அதற்கான பின்னணி என்ன என்பது குறித்தும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

பறந்து வந்த தூது
எப்படியிருந்தாலும் பொதுக்குழு நடத்தப் போவது உறுதி, எம்ஜிஆர் காலம் முதல் அனைத்து பொது குழுக்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பொதுக்குழு நடக்கவில்லை என்றால் அது எதிர்கட்சியான திமுக கடும் கேலி செய்யும் அளவுக்கு சென்றுவிடும். எனவே எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசிக்கொள்ளலாம் நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என இபிஎஸ் தரப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து இபிஎஸ் தரப்புக்கு போன ஒரு மூத்த நிர்வாகி பேசியுள்ளார்.
Recommended Video

பலமான திட்டம்
தற்போது எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கிய நிலையில் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே தற்போதைக்கு முதல்வர் வேட்பாளர் பொறுப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் விட்டுக் கொடுத்தது போல பொதுக்குழுவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை கைவிரித்து, நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், அதே நேரத்தில் கட்சியில் தான் இருந்தால்தான் பிற்காலங்களில் எதுவும் செய்யமுடியும் என உணர்ந்து இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர் பொதுக்குழுவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.
-
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications