உங்கள் வீட்டு கிச்சனில் துர்நாற்றம் வருதா.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.. வேற லெவலில் மணக்கும்
சென்னை: இப்போது கல்லூரியை முடித்துக் கொண்டு இளைஞர்கள் பலரும் தனியாகவே இருந்து வரும் நிலையில், வீட்டை எப்படி ஈஸியாக பராமரிக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது இளைஞர்கள் தனியாக இருப்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. படிப்பு, வேலை என பல்வேறு காரணங்களால் உறவுகள் இப்போது தனியாகவே இருக்கிறார்கள்.
இளைஞர்கள் தனியாக இருப்பதால் அவர்கள் பல்வேறு விதமான விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்கிறார்கள். குறிப்பாக குக்கிங் நடைபெறும் சமையலறையை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும், மசாலா டப்பா முதல் சமைக்கப்படும் உணவுகள் வரை பல வித வாசனைகள் சமயலறையில் இருக்கும்.. இதனால் நாம் எவ்வளவு சுத்தமாக நமது கிச்சனை வைத்திருந்தாலும் கூட சில நேரங்களில் அங்கே இருந்து துர்நாற்றம் ஏற்படும். எதனால் இப்படி துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை நம்மால் உடனடியாக கண்டறியவே முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக எப்படி எஸ்கேப் ஆக வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
கிச்சனில் இருந்து திடீரென இதுபோன்ற துர்நாற்றம் ஏற்பட்டால், பேப்பர் அல்லது துணியில் கற்பூரத்தைக் கட்டி வையுங்கள். இதேபோல மடித்து அதை கிச்சனின் வெவ்வேறு மூலைகளில் வைக்கவும். இப்படிச் செய்வதால் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தைக் குறைக்க முடியும். ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை கற்பூரத்தை மாற்றிவிடுங்கள்.
மேலும், திடீரென நாற்றம் வந்தால், கிச்சனை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பஞ்சில் எசன்ஷியல் ஆயிலில் நனைத்து வைத்தும் மோசமான நாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். அதீத நாற்றம் வீசினால், 1 முதல் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலக்கி கிச்சனில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதன் மூலம் எவ்வளவு மோசமான துர்நாற்றமாக இருந்தாலும் இது இயற்கையாகவே கணிசமாகக் குறையும்,

இயல்பாகவே கிச்சன் வாசனையுடன் இருக்க கிச்சனில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி வாசனை பூக்களை வைத்து நிரப்பி வையுங்கள். பூக்களின் வாசம் கிச்சனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.மல்லிகை, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூக்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
இது தவிர நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரியும் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத் தோல் மூலம் கிச்சனை வாசனை மிகுந்த ஒன்றாக மாற்ற முடியும். எலும்பிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை நீரில் போட்டுக் கொதிக்க விடவும். அதில் இலவங்கப்பட்டை தூளை அதில் சேர்த்து நீர் ஆறியதும் அதை கிட்சன் முழுவது ஸ்ப்ரே செய்தால் துர்நாற்றம் குறைந்து, நல்ல வாசனை இருக்கும்.
கிச்சனில் இருக்கும் காய்கறி வெட்டும் பலகையில் இருந்தும் கூட மோசமான ஸ்மெல் வரும். இதைத் தடுக்க எலுமிச்சையில் உப்பைத் தடவி அதை பலகையில் தேய்க்க வேண்டும். இதன் மூலமும் கிச்சன் துர்நாற்றத்தை நீக்க முடியும். இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டெப்களை பின்பற்றுவதன் மூலம் கிச்சனை எப்போதும் வாசனை மிகுந்ததாக வைத்துக் கொள்ளலாம்.
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications