'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்!
சென்னை: 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் அதை எப்படி வழங்கலாம் என்ற திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளதாம். இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் ரேஷன் கடை வழியாக இந்த கூப்பனை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
திமுக-வின் தேர்தல் அறிக்கையில் 'ஹீரோயின்' ஆக ஜொலிக்கும் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல்களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்' என முதல்வர் அறிவித்திருந்தார்.

இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது
எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால், "இந்த கூப்பனை எங்கே கொடுப்பார்கள்? ரேஷன் கடையிலா அல்லது பணமாகவா?" எனப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தன. இதோ, தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்த சில சுவாரஸ்யமான எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்:
நேரடி டீலர்ஷிப்... அங்கீகரிக்கப்பட்ட கடைகள்!
அரசு வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, அரசு வழங்கும் பொருட்களை வாங்க வேண்டியது இல்லை, தனியார் டீலர்களிடம் வாங்கலாம். இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தி தமிழகத்தின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் டீலர்ஷிப்களில் (Major Dealerships) பொருட்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாம்.
அதாவது, அரசு ஒரு 'அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலை' (Approved Dealership List) வெளியிடும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இந்தக் கூப்பனைப் பணத்திற்குப் பதில் கொடுத்து, உங்களுக்குத் தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி அல்லது இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றைத் தள்ளுபடி விலையில் அல்லது முழுமையாக வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் இந்த கூப்பனை அரசிடம் கொடுத்த refund பெற்றுக்கொள்வார்கள்.
ஏன் இந்த நேரடி முறை?
கடந்த காலங்களில் இலவசமாகப் பொருட்களைக் கொடுத்தபோது, அவை தரமற்றதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஆனால், இப்போது:
மக்களின் விருப்பம்: மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வெளிப்படைத்தன்மை: அரசு நேரடியாக டீலர்களுக்குப் பணத்தை வழங்குவதால், ஊழல் புகார்களுக்கு இடம் இருக்காது.
பொருளாதார சுழற்சி: இதன் மூலம் உள்ளூர் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் வியாபாரம் பெருகும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை?
வருமான வரி செலுத்தாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பட்டியல் எப்போது வரும்?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சி அமைந்தால் மாவட்ட வாரியாக எந்தெந்தக் கடைகளில் இந்தக் கூப்பனைப் பயன்படுத்தலாம் என்ற பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமாம்.
அதிமுக-வின் 'இலவச பிரிட்ஜ்' அறிவிப்புக்குத் பதிலடியாக, "உங்களுக்குப் பிடித்தப் பொருளை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள்" என திமுக வீசியிருக்கும் இந்த 'இல்லத்தரசி' கூப்பன் அஸ்திரம், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications