Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் வருகிறது மாற்றம்.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு.. "அதை தராதீங்க" .. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. என்ன அது?

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

Huge Announcement for All the Ration Shops and whats the Major Advise by Tamil Nadu Government

மேலும், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, ரேஷன் கடைகளில், கருவிழி சரிபார்ப்பு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் சொல்கிறார்கள். அதேபோல, பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யையும் வழங்கபோவதாக கூறுகிறார்கள்.

வசதிகள்: இப்படி எண்ணற்ற அதிரடிகளை பொதுமக்களின் நன்மைக்காக தமிழக அரசு செய்து வரும்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களின் வசதியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக, ரேஷன் பொருட்களை எல்லாம், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளுக்கு, மாத இறுதியில் அனுப்பிவைக்கப்படுவது வழக்கமாகும்.. பிறகு, அங்கிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பெரிய கூட்டுறவு சங்கங்கள், லாரிகளில் சுமை தூக்கும் ஊழியர்களுடன் பொருட்களை ஏற்றி, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு பிறகே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அப்பொருட்கள் விநியோகிக்கப்படும்.

உணவுப்பொருட்கள்: ஆனால், இந்த ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கி வைக்கும்போது, சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணம் கேட்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு முழு லோடுக்கு, 700 ரூபாயும், பாதி லோடுக்கு, 400 ரூபாயும் கேட்கிறார்களாம்.. அப்படி பணத்தை தரவில்லையானால், இறக்கி வைக்க தாமதம் செய்கிறார்களாம்.. மேலும், எடை குறைவாக பொருட்களை தந்துவிடுகிறார்களாம்.

இதனால், வேறு வழியின்றி ரேஷன் ஊழியர்களும், தங்களது சொந்த பணத்திலிருந்து, கூலியை தந்து வந்தாலும், செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்ற புலம்பல்கள் வெடித்துள்ளன. அதனால்தான், இனிமேல், சுமை தூக்கும் ஊழியர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு: இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள், தங்களது ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வழங்கியிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு, லாரியில் அனுப்பப்படும் பொருட்களை இறக்குவதற்காக, சுமை துாக்கும் ஊழியர்களுக்கு இறக்கு கூலி வழங்க வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+