மெட்ரோவில் தினமும் பயணம் செய்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு.. வரப்போகுது அசத்தல் மாற்றம்
சென்னை மெட்ரோவில் புதிய விதமான மேப் டிஸ்பிளே சிஸ்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளே ரயிலின் தற்போதைய இடம், அடுத்த நிலையம், நிலையங்களுக்கு இடையிலான தூரம் மற்றும் அருகிலுள்ள அடையாளங்களைக் கூட காண்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில், எல்சிடி அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப் டிஸ்பிளே சிஸ்டம், 54 கிமீ நெட்வொர்க்கில் இயங்கும் மெட்ரோ ரயில்களில் பல தகவல்களுடன் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளே ரயிலின் தற்போதைய இடம், அடுத்த நிலையம், நிலையங்களுக்கு இடையிலான தூரம் மற்றும் அருகிலுள்ள அடையாளங்களைக் கூட காண்பிக்கும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, பயணிகளுக்கு முடிந்தவரை தகவல்களை வழங்க வரைபடங்கள் வடிவமைக்கப்படும். ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு கோச்சிலும் நான்கு டைனமிக் வரைபடங்கள் மற்றும் நான்கு நிலையான வரைபடங்கள் உள்ளன. நிலையான வரைபடங்கள் ஒரு பக்கத்தில் தொடர்ந்து இருக்கும் போது, டைனமிக் வரைபடங்கள் பேக்லிட் LCD அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப் டிஸ்ப்ளே சிஸ்டம் மூலம் மாற்றப்படும். தற்போதைய இடம் மற்றும் அடையாளங்களைத் தவிர, எந்தப் பக்கத்தில் கதவு திறக்கப்படும் என்பதையும் இது காண்பிக்கும், என்று ஒரு மெட்ரோ நிர்வாகம் கூறி உள்ளது.
ரயிலின் உள்ளேயும் வெளியேயும் உள்ள வெப்பநிலை மற்றும் ரயில் இயங்கும் வேகம் போன்ற கூடுதல் தகவல்களும் வழங்கப்படலாம். அவசரநிலை இருந்தால், காட்சி அமைப்பு அவசர தொடர்பு எண்கள் மற்றும் வெளியேற்ற வழிமுறைகளையும் காண்பிக்கும். விளம்பரங்களைக் காண்பிப்பதற்கான இடம் இருக்கும் என்றாலும், CMRL இன்னும் அது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று ஒரு மெட்ரோ நிர்வாகம் கூறி உள்ளது.
54 கிமீ நெட்வொர்க்கிற்கு வாங்கப்பட்ட மொத்தம் 52 ரயில்களில், 45 ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன, மீதமுள்ளவை காத்திருப்பில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டத்திற்கான முன்மாதிரி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், படிப்படியாக, தொகுதிகளாக, ரயில்களில் டிஜிட்டல் வரைபடங்கள் தொடங்கும், என்று ஒரு மெட்ரோ நிர்வாகம் கூறி உள்ளது.
வேறு சில பணிகள்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் பல மாடிக் கட்டிடங்களை கட்டி அதை வாடகைக்கு விடும் முடிவை எடுத்துள்ளது. ஆலந்தூரில் இதற்காக பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றும் வர போகிறதாம்.
இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கும் என்கிறார்கள். மெட்ரோ மூலம் கட்டப்பட்டும் இந்த கட்டிடங்கள் அலுவலகம் அல்லது சில்லறை வர்த்தக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாகப் பயன்படுத்தப்படும். கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CRML) வருவாயை அதிகரிக்க நிலையங்களுக்கு அருகில் கட்டிடங்களை கட்டி அலுவலகம் அல்லது சில்லறை இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.
பணிகள்: அதன் ஒரு கட்டமாக, மெட்ரோ திட்டத்தில் முக்கிய வழிகளில் டிரான்ஸிட் ஓரியண்ட் டெவலப்மென்ட்டின் கீழ் சொத்து மேம்பாடுகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டர் எடுக்கப்படுகிறது. (ஏக்கர் பரப்பளவில்)
பெருங்குடி (OMR) : 0.78
காரப்பாக்கம் (OMR) : 0.55
மேட்டுக்குப்பம் (OMR) : 0.8
சோழிங்கநல்லூர் (OMR இல்) : 0.61
ஒக்கியம் தொரைப்பாக்கம் (OMR) : 0.64 & 0.86 ஏக்கர் நிலப்பரப்புகள்
நேரு நகர் : 2.44
மாதவரம் : 0.91
சிஎம்ஆர்எல் அதிகாரிகளின் கூற்றுப்படி, 54 கிமீ மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை தினசரி 2.97 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நம்பாமல் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியம்.












Click it and Unblock the Notifications