எனக்கு பசிக்குது நான் சாப்பிடுறேன்.. உனக்கு இன்னா.. கொழுப்பா.. திமிரா.. அதிர வைக்கும் சாமியார்!
அசைவம் சாப்பிடுவது பற்றி சாமியார் அதிரடி பதில் சொல்லி உள்ளார்.
Recommended Video

சென்னை: மாட்டு கறி சாப்பிடுவது குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு சாமியார் போட்ட போடு இருக்கே? அதை கொஞ்சம் பாருங்க!
ஆசிரமம் ஒன்றில் சாமியார் தன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். கீழே தரையில் ஜமுக்காளத்தில் அவரது பக்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் தன் சந்தேகத்தை கேட்கிறார், "ஐயா.. நான்-வெஜ் சாப்பிடுவது அவங்கவங்க மனசை பொறுத்தது-ன்னு சொல்றீங்க. ஆனா ஒரு கோழியோ, ஆட்டையோ பிடித்து அறுக்கும்போது அவைகளுக்கு வலிக்குது இல்லை. "? என்று சொல்கிறார். அதற்கு ஐயா சொன்ன விளக்கம்தான் இது:

யானையை சாப்பிடறாங்க
"அதைவிட அறுக்கறவங்களுக்கு எவ்வளோ வலிக்கும்? ஒரு மாட்டை அறுக்கிறது எவ்வளோ பெரிய கஷ்டம் தெரியுமா? அந்த மாடு இவ்ளோ பெரிசா இருக்கு!! அதை ரெண்டு பக்கமும் பிடிச்சிக்கிட்டு, கழுத்தை பிடிச்சு அறுத்துட்டு, அதன் தோலை அழகா உரிச்சி... என்னா வேலை தெரியுமா அது? வேர்த்து விறுவிறுத்துடும். யானேயே அறுத்து சாப்பிடறாங்க தெரியுமா?" என்றார்.

திமிரா? கொழுப்பா?
உடனே அந்த பக்தர், "இல்லை ஐயா.. அப்படி கொன்னு சாப்பிடும்போது மனசு வலிக்குது" என்று சொல்கிறார். அதற்கு சாமியார், "அது உங்க பிரச்சனை, என்கிட்ட ஏன் அதை சொல்றே? உனக்கு பிடிக்கலையா நீ சாப்பிடாதே.. விட்டுட்டு போ.. பசிக்கிறவனுக்குதான் சாப்பாட்டு அருமை தெரியும். உனக்கு என்ன திமிரா? துட்டு கொழுப்பா உனக்கு?

நல்லா உரைக்கட்டும்
பரம்பரை பரம்பரையா நீ சாப்பிடலைன்னா அது என் பிரச்சனையா? கோழிக்கும் ஆட்டுக்கும், மாட்டுக்கும் இரக்கப்படறியே, மனுஷங்களுக்கு யாருடா இரக்கப்படறது? அதுங்க மேல உனக்கு இரக்கமா? உனக்கு மட்டும் இல்லை, இது மாதிரி கேட்கறவங்களுக்கு உரைக்கணும்னுதான் பதில் சொல்லிட்டு இருக்கேன். இதன்மூலமா 10 பேரை திட்டலாம் இல்லை?

கடவுள் இருக்காரு
நீ பசியில பிச்சையெடுக்க போனா, உனக்கு நாத்தம் பிடிச்ச மீனை உன் தட்டுல போட்டா என்னய்யா செய்வே? எனக்கு அது கிடைச்சிருந்தா, 'இறைவா இந்த மீனு கிடைச்சதுக்கு நன்றி'ன்னு சொல்லுவேன். எனக்கும் கடவுள் இருக்காரு. எனக்கு மீன் கிடைச்சது சாப்பிடறேன், இதுக்கு உயிர் இருக்கு, வலி இருக்கு"ன்னு வந்து சொல்றே?

தயிர் சாதம் ஏன்?
அதனால பொதுவா சொல்றேன், உங்களுக்கு பிடிக்கலையா... யாரும் சாப்பிடாதீங்க. ஏன் கறி சாப்பிடலைன்னு உங்கள வந்து நாங்க கேட்டோமோ? "சார்.. நீங்க ஏன் தயிர் சாதம் சாப்பிடறீங்க?"ன்னு இதுவரைக்கும் யாரையாவது நாம் கேட்டோமா?
ஏன் தப்பா பேசறே?
தயிர் சாதம் எல்லாம் சாப்பிடக்கூடாது, அதல ஒரு ம....ம் கிடையாதுன்னு நாம சொன்னோமா? பசு பால் கொடுக்குதா, நீயா கறக்கறியா? பசு பால் கொடுக்கும்னு ஏன் தப்பா சொல்லிக் குடுத்துட்டு இருக்கே? கேக்கறதுக்கு ஆள் இல்லைன்ற நினைப்பா?" இப்படி போகிறது அந்த சாமியாரின் அதிரடி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications