தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம்! இலவச பூஸ்டர் டோசும் செலுத்த வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொள்ள முடியும்.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. தினசரி பாதிப்பு என்பது 2,500யை கடந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல சரிந்து வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுஇடங்களில் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

32வது தடுப்பூசி முகாம்
இதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு விரைப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 32வது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் இடத்தில் இன்று முகாம்
இந்த முகாம்கள் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியும். தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசிம் போட்டு கொள்ள முடியும். ஏற்கனவே முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் 75வது சுதந்திர தினத்தையொட்டி செப் 28 வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியும்.
Recommended Video

சுகாதாரத்துறை இயக்குனர்
இந்த முகாம் மூலம் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத, 1.5 கோடி மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ‛‛தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் 30க்குள் தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications