தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம்: சென்னையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஜே.பி. நட்டா கூறியதாவது:

அஸ்ஸாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்க இருக்கிறது. புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தல்களிலும் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கேரளாவைப் பொறுத்தவரையில் இடதுமுன்னணி, ஐக்கிய முன்னணி அரசுகள் மோசமான ஆட்சியை நடத்தி இருக்கின்றன. இப்போது மக்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க முன்வந்திருக்கிறார்கள்.
கேரளாவிலும் பாஜக கணிசமான வெற்றிப் பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.












Click it and Unblock the Notifications