இடியை இறக்கிய இந்தியன் ஆயில்..சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் டெலிவரி நிறுத்தம்! ஹோட்டல் ஓனர்கள் ஷாக்
சென்னை: சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் ஆயின் கார்ப்பரேசன் நிறுவனம் மார்ச் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை தற்போது வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாட்டின் பிற நகரங்களிலும் இதே போன்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெங்களூர் நகரில் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மார்ச் 10ஆம் தேதி முதல் பல உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள உணவக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலைமை உணவக தொழிலில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மும்பை நகரிலும் ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்குள்ள உணவக உரிமையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு சர்வதேச அரசியல் சூழல் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலை உலக சந்தையில் எரிபொருள் கிடைப்பை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையில் பல்வேறு வகையான எரிபொருட்களுடன் சேர்ந்து எல்பிஜியும் பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதற்கிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், உலகளாவிய அரசியல் சூழ்நிலை காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொழில் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவில் எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவக தொழிலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால் ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில இடங்களில் எட்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையால் பொதுமக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பலர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications