இந்தோனேசியா நிலநடுக்கம்..2004ல் சென்னையை சுருட்டி வீசிய சுனாமி அலைகள்..பறிபோன பல ஆயிரம் உயிர்கள்
சென்னை: நிலநடுக்கமும் சுனாமியும் மக்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழ்நாடு இலங்கை வரை எதிரொலித்தது. வங்கக் கடல், இந்தியப்பெருங்கடலில் எழுந்த சுனாமி அலைகள் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது. இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அதன் இருப்பிடம் உள்ளதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் நேற்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டது. பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் கடற்கரையோர நகரங்களில் வசித்த பல ஆயிரம் உயிர்களை சுனாமி அலைகள் சுருட்டிக்கொண்டு போய் கபளீகரம் செய்தன. கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் மண்ணிற்கு மொத்தமாக புதைக்கப்பட்டனர். உயிர்களையும் உறவுகளையும் இழந்தவர்கள் 19 ஆண்டுகளாக கடற்கரைகளில் டிசம்பர் 26ஆம் தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதியன்று அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இதில் 331 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications