இந்த தொகுதிகள்தான் முடிவை மாற்றும்! அதிமுகவிற்கு கீழே போக கூடாது! அடித்து தூக்கும் அண்ணாமலை! அதிருதே
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக சில இடங்களில் இரண்டாம் இடம் வரும். சில இடங்களில் பாமக ஆதரவுடன் பாஜக இரண்டாம் இடம் வரும். பாமக போட்டியிடும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும். தர்மபுரியில் கண்டிப்பாக பாமக இரண்டாம் இடம் பிடிக்கும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லை. அதிமுக தேமுதிக விஜயகாந்த் இமேஜை பயன்படுத்தி இரண்டாம் இடம் வர பார்ப்பார்கள் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார் .

ஒன்இந்தியாவிற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கட்சியின் பலம், பிரதமர் வேட்பாளர் இதை எல்லாம் வைத்துதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சி எது என்று தெரியும். அந்த அடிப்படையில் அதிமுக சில இடங்களில் இரண்டாம் இடம் வரும். சில இடங்களில் பாமக ஆதரவுடன் பாஜக இரண்டாம் இடம் வரும். பாமக போட்டியிடும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும். தர்மபுரியில் கண்டிப்பாக பாமக இரண்டாம் இடம் பிடிக்கும்.
சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லை. அதிமுக தேமுதிக விஜயகாந்த் இமேஜை பயன்படுத்தி இரண்டாம் இடம் வர பார்ப்பார்கள். கொங்கு பகுதிகளில் பாஜக பலமாக உள்ளது. அண்ணாமலை, மோடி பிரதமர் என்பதால் கொங்கில் பாஜக வளரும். கவுண்டர், மோடி ஆதரவு காரணமாக அண்ணாமலைக்கு சாதகமாக இருக்கும். அண்ணாமலை வெற்றிபெற முயற்சி செய்வார்.
பாஜக அதிமுகவிற்கு கீழே செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இதனால் கொங்கு மண்டலம் சுவாரசியமாக இருக்க போகிறது. சட்டசபையை மையமாக வைத்து இந்த தேர்தல் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தை மையமாக வைத்தே இந்த தேர்தல் நடக்கும். கோவை குண்டுவெடிப்பு, நாடாளுமன்ற பிரச்சனைகள், பிரதமர் வேட்பாளர் போன்ற விஷயங்கள் இந்த தேர்தலில் பெரிய அளவில் கவனம் பெறும். இது எடப்பாடி அதிமுக, ஜெயலலிதா அதிமுக இல்லை.
எடப்பாடி அதிமுக சட்டசபை தேர்தல் போல நாடாளுமன்ற தேர்தலில் பலமாக இருக்காது. அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் பலமாக இருக்கிறார். கோவையில் அதிமுகவை விட அண்ணாமலை நன்றாக செயல்படுவார். தென் சென்னையில் நன்றாக போட்டி இருக்கும். அங்கே ஜெயவர்த்தன - தமிழச்சி - தமிழிசை இடையே போட்டி இருக்கும். ஜெயங்கொண்டத்தில் இதேபோல் கடுமையாக போட்டி இருக்கும்.
அதிமுக பலகீனமாக இருக்கும் போது அந்த வாக்குகள் பாஜகவிற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதுதான் இந்த முறை நடக்க போகிறது. நெல்லையில் இதேபோல் கடுமையாக போட்டி இருக்கும். நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கும் அதிமுகவினருக்கும் நெருக்கம் உண்டு. இதனால் அங்கே போட்டி வித்தியாசமாக இருக்கும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications