"செல்லும் செல்லாதுனு" ஒரே வார்த்தையில் சொல்லாமல்! நீதிபதி பயன்படுத்திய "அந்த" அதிகாரம்.. உண்மை என்ன?
சென்னை: ஓபிஎஸ் தரப்பே கேட்காத ஒரு நிவாரணத்தை தனி நீதிபதி கொடுப்பதற்கு சட்டத்தில் வழியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக் குழு வழக்கில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பல முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

கேட்காத நிவாரணம்
அதில் ஒன்றுதான் ஓபிஎஸ் தரப்பு கேட்காத நிவாரணத்தை தனி நீதிபதி கொடுத்துள்ளார் என்பதாகு���். அதாவது ஓபிஎஸ் கேட்டது ஜூலை 11 ஆம் தேத பொதுக் குழு செல்லுமா செல்லாதா என்பதுதான். அதற்கேற்பதான் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். ஆனால் அவர்களே கேட்காத ஒரு நிவாரணமாகனன ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நலையே தொடரும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இரட்டை தலைமை
அதாவது ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலை என்றால் அதிமுகவில் இரட்டை தலைமை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர�� பதவிகள் தொடரும் என்பதாகும். இதைத்தான் எடப்பாடி பழனிசாமி முக்கிய வாதமாக முன் வைத்துள்ளது. இது போல் கேட்காத ஒரு நிவாரணத்தை நீதிபதிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உரிமையியல் வழக்கு
இதுகுறித்து வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, உரிமையியல் தொடர்பான வழக்குகளில் மனுதாரரே கேட்காத ஒரு நிவாரணத்தை வழங்கலாம். இந்த சட்டவிதியை வைத்தே உச���சநீதிமன்றமும் சில வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதாவது உரிமையியல் தொடர்பான வழக்குகளில் இவ்வாறு நிவாரணத்தை வழங்குவது என்பது நீதிபதியின் அடிப்படை உரிமையாகும்.

சட்டத்தில் இடம் உண்டு
வாதி, பிரதிவாதிகளின் வாதங்களை கேட்ட பிறகு யார் தரப்பில் நியாயம், நீதி, இருக்கிறதோ அந்த தரப்புக்கு அவர்கள் கேட்காத வகையில் ஒரு நிவாரணத்தை அளிக்கலாம். இதனால் வாதி பிரதிவாதி கேட்ட���ர்களா கேட்கவில்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனனர்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications