‘ஜனநாயகன்’ எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது.. நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு கடும் ஆட்சேபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எடிட்டர் உமா சங்கருக்கு முன்ஜாமீன் வழங்க தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், இயக்​குநர் எச்​.​வினோத் இயக்​கத்​தில் உருவான திரைப்​படம் ஜனநாயகன். விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், அவரது ரசிகர்​கள் மத்தியில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நில​வியது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்​டிகையை முன்​னிட்டு வெளி​யாக வேண்​டிய இப்​படம், தணிக்கை சிக்​கல்​களால் தள்​ளிப்​போனது.

jana nayagan

நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்​கைக் குழு படத்தை ஆய்வு செய்​தது. விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் பெற்று படம் திரையரங்​கு​களில் வெளி​யாகும் என ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்த நிலை​யில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப்​ப​திப்​பும் இணை​யதளங்​களில் சட்ட விரோத​மாகக் கசிந்​தது.

இது படக்​குழு​வினர் மட்​டுமின்​றி, ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் அதிர்ச்சி அடையச் செய்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக டிஜிபி அலு​வல​கத்​தில் அளிக்​கப்​பட்ட புகாரின்​ பேரில், மாநில சைபர் கிரைம் போலீ​சார் விசா​ரணை நடத்​தினர். முதல்​கட்​ட​மாக படம் வெளி​யான அனைத்து இணை​யதள முகவரி​களை​யும் கண்​டறிந்​து, அவற்றை சைபர் க்ரைம் போலீ​சார் முடக்​கினர்.

மேலும் படங்​களை நண்பர்​களுக்கு பகிர்ந்த 6 பேரை அடுத்​தடுத்து கைது செய்​தனர். மேலும் திரைப்​படம் கசிய மூளை​யாகச் செயல்​பட்​டது யார் என தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்​படத்​துக்​கான எடிட்​டிங் ஸ்டூடியோவில் உதவி எடிட்​ட​ராக பணிபுரிந்​தவர் கைது செய்யப்​பட்​டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், திரைத் துறையில் தனக்கு யாரையும் தெரியாது, எந்த தொடர்பும் இல்லை. இதய நோயாளியான தான், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்; ஜனநாயகன் படத்தை யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை; யாருக்கும் படத்தை பகிரவும் இல்லை, படம் வெளியானதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளனர்; எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்ய இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தெரிவித்தார். முக்கிய குற்றவாளியான இவர் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான பிறகு இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

வழக்கில் கைது செய்யப்பட்டவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+