அப்பல்லோ டூ கொடநாடு செல்ல விரும்பிய ஜெயலலிதா.. நோ சொன்ன மருத்துவர்கள்.. I am your bossனு சொன்ன ஜெ!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் இறப்பதற்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டுக்கு போக விரும்பியதாக அவரது தோழி சசிகலா தெரிவித்ததாக நமது எம்ஜிஆர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு காலமானார்.
இவரது மரணம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வருவதால் அதுகுறித்து விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு எஸ்டேட்
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த 4 மர்ம மரணங்கள் நிகழ்ந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கிய ஆவணங்கள்
இந்த பங்களாவிலிருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்ல வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாக அவரது தோழி சசிகலா கூறியதாக நமது எம்ஜிஆர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

செய்தித் தாள்
இதுகுறித்து சசிகலா சொன்னதாக அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் மருத்துவர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம்தேதி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினர்.

அப்பல்லோ டூ கொடநாடு
ஆனால் ஜெயலலிதாவோ தான் நேராக கொடநாடு எஸ்டேட்டிற்குதான் செல்வேன், போயஸ் தோட்டத்திற்கு செல்ல மாட்டேன் என்றாராம். அதற்கு மருத்துவர்கள், அங்கு குளிராக இருக்கும். உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவது கடினமாக இருக்கும். அதனால் எங்களுக்காக ஒரே ஒரு மாதம் மட்டும் சென்னை போயஸ் தோட்டத்தில் இருங்கள்.

பூரண நலம்
மருத்துவ பரிசோதனைகள் முடித்துக் கொண்டு பூரண நலம் பெற்றவுடன் கொடநாடு செல்லலாம் என அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் ஜெயலலிதாவோ இங்கே நான்தான் பாஸ் என மருத்துவர்களிடம் தெரிவித்ததாக சசிகலா நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாக கொடநாடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications