ஜெயலலிதா நினைவுநாள்... ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு சவால்விட்டு மாஸ் காட்ட தினகரனுடன் ஸ்கெட்ச் போட்ட சசிகலா!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுகவில் தங்களது அணியே வலிமையானது என்பதை வெளிப்படுத்த சசிகலா தரப்பு மும்முரமாக இருக்கிறதாம். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை நேற்று மாலை சசிகலா அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுகவின் உட்கட்சி மோதல் இப்போது புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த இரு பதவிகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கேட்டு வந்த ஒருசிலர் கடுமையாகத் தாக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

டிச.7-ல் தேர்தல்
மேலும் அதிமுகவின் இந்த திடீர் உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரத்தில், வன்முறைகள் நிகழ்ந்தால் உட்கட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற உள்ளது.

சசிகலா அறிக்கை
இதனிடையே அதிமுகவின் இந்த மாற்றங்கள் தொடர்பாக சசிகலா நாள்தோறும் அறிக்கை கொடுத்தும் வருகிறார். சசிகலா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், உட்கட்சி தேர்தலில் விருப்ப மனு வாங்க சென்ற அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துள்ளார்; தங்களுக்கு கொடிபிடிக்கும் தொண்டர்கள்தான் தேவை- தடி எடுக்கும் குண்டர்கள் கட்சிக்கு தேவை இல்லை; அதிமுக தொண்டர்கள் நிலையைப் பார்த்து எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ணீர் வடிப்பார்கள் என குமுறி இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஜெயலலிதா நினைவு நாள்
ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர் போலீசார். இது தொடர்பாக நேற்று மாலை தினகரனை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தினகரனின் அமமுக கட்சி இருப்பதால் அதிமுகவுக்குள் எளிதாக நுழையமுடியவில்லை; ஆகையால் அந்த கட்சியை கலைக்கும் அறிவிப்பை தினகரன் வெளியிட வேண்டும் என சசிகலா கூறியிருந்தாராம். ஆனால் அதனை தினகரன் ஏற்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்தார் சசிகலா என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் திடீரென தினகரனை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சசிகலா.

தினகரன்-சசிகலா ஆலோசனை
இந்த ஆலோசனையின் போது ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வரும் போது நிச்சயம் மாஸ் காட்டும் வகையில் தொண்டர்களை திரட்டுவார்கள். அவர்களைவிட நமக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக கொடிகளுடன் தொண்டர்கள் திரள வேண்டும். அதற்காக என்ன செய்ய முடியுமோ அதனை செய்தாக வேண்டும் என கூறினாராம் சசிகலா. ஜெயலலிதா நினைவு நாளான இன்று அதிமுகவில் எந்த அணிக்கு பெருங்கூட்டம் கூடுகிறது என்கிற மாஸ் காட்டும் கூட்டமாக இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications