ராஜ்குமார், பாலகிருஷ்ண ரெட்டி, வைகோ.. 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சாந்தி!
Recommended Video
சென்னை: பெரம்பூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஓசூர் எம்எல்ஏவும் அதிமுக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தண்டனை வழங்கியவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சாந்தியாவார்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சாந்தி இது வரை 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் முதல் வழக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு தண்டனை.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் 15 வயது மகள் மகள் சத்யா. பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

10 ஆண்டுகள் சிறை
விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது நீதிபதியாக இருந்தவர் சாந்தி.

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை
அடுத்தப்படியாக அதிமுக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி வழக்காகும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி 1998-ம் ஆண்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜகவில் நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி மீது அரசு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர் உள்ளிட்ட 108 பேர் மீது போலீசார் 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிபதி சாந்தி
அவர் மீதான இந்த வழக்கை சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு பால கிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார் ரெட்டி. இந்த வழக்கிலும் நீதிபதி சாந்தியே தீர்ப்பளித்தார்.

தேச துரோக வழக்கு
மூன்றாவது வழக்கு வைகோ மீதான வழக்காகும். கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர்.

குற்றவாளி என தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை காலம் ஓராண்டு விதிக்கப்பட்டுள்ளது. ரூ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பையும் நீதிபதி சாந்தியே வழங்கினார்.

3 முக்கிய வழக்குகள்
எனவே சிறுமி பாலியல் வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கும் தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தியே தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications