Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரத்திற்குள் நிறுத்த வேண்டும்.. கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு ஊபர், ஏஎன்ஐ உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

Karnataka High Court orders suspension of bike taxi services within 6 weeks

இந்த வழக்குகள் நீதிபதி ஷ்யாம் பிரசாத் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வாகனங்களாக பைக் டாக்சிகள் இயக்க முடியாது என்பதால் அவை சட்டவிரோதமானவை என்று கர்நாடக மாநில அரசு வாதிட்டது.

இதையடுத்து, பைக் டாக்ஸிக்கு என உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊபர் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சிகள் ஆறு வாரங்களுக்குள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். மேலும், கர்நாடக மாநில அரசை 3 மாத காலத்திற்குள் பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது.

பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் பைக் டாக்சிகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+