கருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் சென்னையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கருணாநிதி மறைந்து ஓராண்டுகள் ஆகிறது. இதனால் கருணாநிதி குடும்பத்தில் விசேச நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
கருணாநிதி நினைவுநாளான ஆகஸ்ட் 7-ந் தேதிக்குப் பின்னர் இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததாம். ஆனால் ஆடி மாதம் என்பதால் தற்போதைய ஆனி முகூர்த்த நாளிலேயே ஜோதிடர்கள் அறிவுரைப்படி இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது.
திமுகவினருடன் அதிமுகவினர் நட்பு பாராட்டுவது என்பது அபூர்வமானதாக இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை மாறியது.
தற்போது அதிமுக- திமுக உயர் மட்டத் தலைவர்கள் குடும்பத்துக்குள்ளேயே திருமண உறவுகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications