சசிகலாவை சந்திக்க முடிவெடுத்த இரண்டு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் அதிமுக!
சென்னை 4 வருடத்திற்கு பிறகு சென்னை திரும்பியுள்ள சசிகலாவை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கருணாஸ் மற்றும் தனியரசு சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலாவிற்கு ஆதரவாக செல்லும் அதிமுகவினரை அடுத்தடுத்து நீக்கி வரும் மேலிடம் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதை தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் உறுதி செய்யவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா, கடந்த 8ம் தேதி சென்னைக்கு திரும்பினார். பெங்களூரில் இருந்து சென்னை வரை அவருக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

23 மணி நேர பயணம்
பெங்களூருவில் காலை 8 மணிக்கு தொடங்கிய சசிகலாவின் சென்னை பயணம் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 23 மணி நேரம் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வர நேரம் எடுத்தது. அந்த அளவிற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் மிக நீண்ட வரவேற்பு அளித்தனர். அமமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

சசிகலா பேச்சு
சென்னை வந்த சசிகலா அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு திமுக என்ற பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பேசினார். அவர் முதல்வர் எடப்பாடி குறித்தோ அல்லது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் குறித்தோ எதுவும் பேசவில்லை. அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற ரீதியில் தான் கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்,

சசிகலாவுக்கு இடமில்லை
ஆனால் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதிமுகவில் உள்ள அமைச்சர்களும் இதே கருத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முதல்வரும், அமைச்சர்களும் வைத்து வருகிறார்கள்.

ரகசிய ஆதரவு
இது ஒருபுறம் எனில் சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு உள்ளது. சசிகலா ஓய்வில் இருந்த போதே 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் ரகசியமாக சந்தித்து தங்களின் ஆதரவையும் தந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

சசிகலாவை சந்திக்க முடிவு
ஆனால், சென்னை திரும்பிய சசிகலாவை இதுவரை அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ நேரடியாக சந்திக்கவில்லை. ஒருசில முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலம் மட்டுமே பேசியதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கருணாஸ் மற்றும் தனியரசு எம்.எல்.ஏக்கள் சசிகலாவை அடுத்த வாரம் சந்திக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும், சசிகலாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்கானதாகவும் இருக்கும் என சசிகலா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications