வியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
சென்னை: சிறு குறு வியாபாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்வதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.

தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகளைக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி மத விழாக்களுக்கு ரத்து, இபாஸ் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி தமிழக அரசின் அறிவிப்பில் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை மார்க்கெட் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பாதிப்பில் இருந்தே சிறு குறு வியாபாரிகள் மீளாத நிலையில், தற்போதைய தடை பெரும் சுமையை ஏற்படுத்தும் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோயம்பேடு வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோயம்பேடு வணிக நிர்வாக முதன்மை இயக்குநர் கோவிந்தராஜ், சிறு குறு மற்றும் சில்லறை வியபார சங்க பிரதிநிதிகள், சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோயம்பேடு சந்தை இன்று மட்டும் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications