கோயம்பேடு பக்கம் போய்ராதீங்க.. கிலோ பீன்ஸ் ரூ. 160க்கு விக்குதாம்.. எல்லா காய் விலையும் விர்விர்!
வெயில் காரணமாக கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
சென்னை: ஒரு கிலோ பீன்ஸ் 160 ரூபாயாம்.. கோயம்பேடு மார்கெட்டில்தான் இந்த விலை விற்கிறது. இது மட்டுமல்ல எல்லா காய்கறிகளின் விலையுமே உயர்ந்துதான் இருக்கிறது!
வெயில் அடிச்சாலும் சரி, மழை பெய்தாலும் சரி, பெட்ரோல் விலை உயர்ந்தாலும் சரி.. கடைசியில் பாதிக்கப்படுவது சாமான்ய மக்கள்தான்! அதிலும் நேரடியாக பாதிக்கப்படுவது காய்கறி விலை உயர்வினால்தான்!

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என கிட்டத்தட்ட தென்னிந்திய மாநிலங்களில் வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விளைவு.. தினமும் கோயம்பேடுக்கு 10 லாரிகளில் பீன்ஸ் வந்து இறங்கும். ஆனால் இது பாதியாக குறைந்து போய், இப்போது விலையும் அதிகமாகி விட்டது. பீன்ஸ் ஒரு கிலோ விலை ரு.160 ஆக உள்ளது. இதுவாவது பரவாயில்லை. எப்போதுமே கோயம்பேட்டுக்கு ஊட்டியில் இருந்து பீன்ஸ் வரும். ஆனால் இப்போது அதுவும் வரவில்லை.
ஒரு பக்கம் மழை இல்லை, இன்னொரு பக்கம் வெயில்.. இதனால் எல்லா காய்கறிகளின் விலைகளும் 25 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. தக்காளி 20 ரூபாய் இருந்தது.. இப்போது 40 ரூபாயாம்.. எல்லாமே டபுள் ஆகி விட்டது!
மே மாசம் புதிதாக காய்கறிகள் விளைந்தால்தான் இந்த விலையெல்லாம் குறையும் என தெரிகிறது! ஆனால் நல்லவேளை.. கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை அப்படியே இருப்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications