ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி வதந்தி ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சிதான்- குஷ்பு அந்தர் பல்டி
சென்னை: ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி வதந்தி ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சிதான் என குஷ்பு ஒரே போடு போட்டார்.
காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளுக்கிடையேயான பிரச்சினையால் அதிருப்தியில் இருந்த குஷ்பு திடீரென நேற்று முன் தினம் டெல்லி சென்றார். இதையடுத்து அவர் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்றைய தினம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பாஜக மூத்த நிர்வாகியை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.

கமலாலயம்
இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த குஷ்புவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தான் கமலாலயத்தில் பதில் அளிப்பேன் என்றார் குஷ்பு.

நீட் தேர்வு
இதையடுத்து சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேளாண் மசோதாவை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அது போல் நீட் தேர்வையும் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான்.

விசுவாசம்
ஆனால் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை பாஜக நிறைவேற்றினால் உடனே அதை இவர்கள் எதிர்க்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. இருக்கும் இடத்தில் நான் விசுவாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அது போல்தான் திமுகவிலும் சரி காங்கிரஸிலும் சரி விசுவாசமாகவே இருந்தேன்.

ட்வீட்
ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி தவறான ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சியினர்தான். பாஜகவில் நான் சேருவதற்கு சுந்தர் சி காரணமல்ல என்றார். இதற்கு முன்னர் ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி தவறாக ட்வீட் போடுகிறார்கள் என பாஜகவை விமர்சித்த அதே வாயால் இன்று காங்கிரஸை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications