Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய வீட்டு மனை பிரிவு! மனைவி, பிள்ளைகளின் நிலம்.. முக்கிய கோரிக்கையுடன் தமிழக அரசிடம் ஓடிய பெயிரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வீட்டுமனை பிரிவு அமைப்பதற்கான இனங்களில் சரியான வழிகாட்டி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ஃபெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு வீட்டு வசதி துறைக்கு முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

Real Estate Tamil Nadu government

கோரிக்கை: குறிப்பாக, வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, புதிய வீட்டுமனை பிரிவு அமைப்பதற்கான இனங்களில் சரியான வழிகாட்டி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமிக்கு, வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார் டாக்டர் ஹென்றி. அவர் எழுதியுள்ள கடிதத்தில் உள்ளதாவது:

"புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OSR) சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண் ROC NO.4367/2019/TCP2 தேதி: 14.08.2021 இல் ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுக்கான (OSR) திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு, நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுமனைகள்: ஆனால், மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு அருகிலுள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில் உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும் வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை.

புதிய வீட்டுமனை பிரிவினை: ஆகவே, பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர, மேற்கண்ட ஒரு ஹெக்டேருக்குள் புதிய வீட்டுமனை பிரிவினை அமைக்கும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கட்டுனர்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை தாங்கள் கருத்தில் கொண்டு,

ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும்,

அவகாசம்: அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயித்து, சலுகை வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறை மற்றும் சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+