காந்தி ஜெயந்தி: டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை.. சென்னையில் ஆளுநர், முதல்வர் அஞ்சலி!
சென்னை : இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் 'காந்தி ஜெயந்தி' என இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் 154வது ஜெயந்தி விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.

சோனியா காந்தி
காந்தி ஜெயந்தியையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சென்னையில் முதல்வர், ஆளுநர் மரியாதை
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் அஞ்சலி
மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகள், நினைவிடங்களில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications