சக்சஸ்.. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் தொகுதி.. திமுக கூட்டணியில் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. ஆளும் திமுக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதி என 40 இடங்களிலும் வெல்லும் நோக்கத்தில் வியூகம் வகுத்து வருகிறது.
மேலும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைவர்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசினார்.
இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பங்கேற்றது. அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினர். ஏற்கனவே முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இது 2வது கட்ட பேச்சுவார்த்தையாகும். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதாவது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இந்த தொகுதி கடந்த முறையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் ஏகேபி சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வாகை சூடினார்.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக கூட்டணியில் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் திமுகவின் கூட்டணி குறித்து பேசும் குழுவுடன் நாங்கள் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறோம். திமுக தலைவரும், எங்கள் கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இந்த தொகுதி பங்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். நானும், முதல்வரும் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டுள்ளோம்.
அதன்படி 2019ம் ஆண்டை போலவே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். அதே நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும். மிக வேகமாக பிற அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. மிக விரைவில் தொகுதியில் நாங்கள் தொடங்குவோம்.
ஒரு சில கட்சிகள் கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று கதவையும், ஜன்னலையும், ஏன் வென்டிலேட்டரையும் திறந்து வைத்துள்ளது. ஆனால் எங்களின் கூட்டணி முடிவான கூட்டணியாகவும், தொடர்ந்து பயணிக்கும் கூட்டணியாக உள்ளது. தமிழக மக்களின் பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்கான கூட்டணியாக பணியாற்றி வருகிறோம். அனைத்து தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications