9 பாமக வேட்பாளர்கள்: கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்; திண்டுக்கல்- திலகபாமா! அன்புமணி போட்டி இல்லை!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாமகவின் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. பாமகவுக்கு பாஜக கூட்டணியில் மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக வேட்பாளர்கள் விவரம்:
திண்டுக்கல் - திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அன்புமணி போட்டியிடவில்லை: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி போட்டியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாமக வேட்பாளர் பட்டியலில் அன்புமணி பெயர் இடம் பெறவில்லை. இதனால் லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடவில்லை.












Click it and Unblock the Notifications