அசைவ கேள்வி உடம்புக்கு ஆகாது..பெரியாரை இழிவுபடுத்திய சீமானுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பொளேர் பதிலடி!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு கவிப்பேரரசு தமக்கே உரித்தான பாணியில் கடுமையான பதிலடி தந்துள்ளார். சீமான் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இன்று நான் சைவம்.. அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது என்று காட்டமான பதிலைத் தந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
சீமான் குறித்த கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அளித்த பதில்: இன்று நான் சைவம்.. அசைவக் கேள்வி என் உடம்புக்கு ஆகாது...விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை எழுதிய வள்ளுவருக்கு நான் உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் அனைவரும் உணவருந்தி செல்ல வேண்டும். இவ்வாறு வைரமுத்து பதிலளித்தார்.

தந்தை பெரியாரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது இயக்கத்தினர் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். சீமானின் இந்த அவதூறுகளுக்கு பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 22-ந் தேதி அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் சீமானுக்கு தமக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications