திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா?
திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும், கஜா புயல் பாதிப்பாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன். தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது.
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஒரே நாளில் அனைத்து தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். சிறிய சட்டமன்ற தேர்தல் போல, மொத்தமாக தேர்தல் நடக்க வேண்டும்.
திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்தது உள்நோக்கம் இருந்தது. அப்போதே இந்த அறிவிப்பு பல சர்ச்சைகளை எழுப்பி இருந்தது.
புயல் நிவாரண பணி முடிவடையாத நிலையில் தேர்தல் நடந்தால் மக்கள் அதிருப்தியடைவர். கஜா நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நிவாரண பணிகள் தடைபடக்கூடாது என்பது முக்கியம், என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications