சென்னை ஐஐடியில் சாதிய பாடுபாடு....மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணை கேட்கும் சிபிஐ முத்தரசன்
சென்னை ஐஐடியில் சாதிய பாடுபாடு, மாணவர் மர்மச்சாவு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஐஐடியில் மாணவர் மர்மச்சாவு, சாதியப் பாகுபாடுகள் உள்பட அனைத்து மர்மச்சம்பவங்கள் குறித்தும் தமிழ்நாடு அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து, சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஐஐடி கல்லூரியில் நிலவி வரும் சாதிய பாகுபாடுகள் காரணமாக மனிதப்பண்பு மற்றும் சமூக அறிவியல் துறை உதவிப் பேராசியர் விபின் பணியிலிருந்து விலகி இருப்பதும், மாணவர் உன்னிகிருஷ்ணன் (30) எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததும் பேரதிர்ச்சியளிக்கிறது.

வளர்ந்து வரும் நாகரிகம், பண்பாடு, அறிவியல் கண்ணோட்டத்தின் அடையாளமாக திகழ்ந்திட வேண்டிய சென்னை ஐஐடி, காட்டுமிராண்டி காலத்தை நினைவூட்டி வருவது வெட்கப்பட வேண்டிய செயலாகும். அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிகழ்வின் மீது ஐஐடி நிறுவனம் வாய் திறக்காமல் அமைதி காத்து வருவது ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விரல்விட்டு எண்ணத்தக்க சில சாதிவெறியர் ஆதிக்கத்தில் நிர்வாகம் சிக்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மதவெறி, சாதி வெறி சக்திகளை உயர்கல்வி நிறுவனத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டியது உடனடித் தேவையாகும். முன்னர் அம்பேத்கர் - பெரியார் ஆய்வு வட்டம் அமைக்கப்பட்டபோதும் சிலரால் அமளிதுமளி செய்யப்பட்டது.
இந்த உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதி வழங்க வேண்டும். தொடரும் சாதியப் பாகுபாடுகள் உள்பட அனைத்து மர்மச்சம்பவங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து, சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications