மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி... வடசென்னைக்கு குடிநீர் கிடைக்குமா?
மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகம், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வடசென்னை பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு நாள் குடிநீர் வராவிட்டாலே மக்கள் திண்டாடிப்போய்விடுவார்கள். மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எல்லாம் சென்னை கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகாலமாக பெய்து வரும் கடும் மழை வெள்ளம் காரணமாக சென்னையில் நீர் நிலைகள் எங்கும் நிரம்பி வழிகின்றன.
புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வட சென்னை பகுதிகளில் மூன்று நாட்களுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர் சுத்திகரிப்பு பராமரிப்புப் பணி
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வடசென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது

எந்தெந்த பகுதிகள்
மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர். கத்திவாக்கம், பட்டேல் நகம், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாற்று ஏற்படாக புழலில் அமைந்துள்ள 300 எம்.எஸ்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடின்றி குடிநீர்
சென்னையில் கடந்த காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது அதிக அளவில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதிக மழை வெள்ளம் காரணமாக ஏரிகள் நிரம்பி வழிவதால் வீடுகளுக்கு நேரடியாக தணணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது பராமரிப்பு பணி காரணமாக நேரடியாக வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் 3 நாட்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை
இதனால், பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
பகுதிப் பொறியாளர்/பகுதி-1 8144930901 திருவொற்றியூர், எர்ணாவூர்,கத்திவாக்கம்
பகுதிப் பொறியாளர்/பகுதி-2 8144930902 மணலி
பகுதிப் பொறியாளர்/பகுதி-3 8144930903 மாதவரம்
பகுதிப் பொறியாளர்/பகுதி-4 8144930904 வியாசர்பாடி, பட்டேல் நகர்
தலைமை அனுவலக புகார் பிரிவு 45674567 28451300
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications