Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ.. அலறியடித்து ஓடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடையின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கரும்புகை சூழ்ந்துள்ளது. 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ஊழியர்கள் யாரும் உள்ளே சிக்கியிருக்கிறார்களா என்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள்.

சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஜவுளிக்கடை, நகைக்கடைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் விடுமுறை தினங்கள் மட்டுமின்றி எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

Chennai T Nagar fire

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. கடையில் இருந்த ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதிகளவில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் வர விடாமல் தடுப்புகளை அமைத்தனர்.

மேலும் தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்குள்ளும் கரும்புகை பரவுவதால் அங்கிருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+