மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளுக்கிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரும் திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே ரவி பச்சமுத்துவும் விலகினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரு கூட்டணியை அறிவித்தார்கள்.

ரவி பச்சமுத்து
இந்த நிலையில் சரத்குமாரும் ரவி பச்சமுத்துவும் இணைந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சரத்குமாரும், கமல்ஹாசனும் தனித்தனியே முதல்வர் வேட்பாளர் என கூறி வந்ததால் குழப்பம் நிலவியது.

பேச்சுவார்த்தை
இதையடுத்து கமல்ஹாசன்தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என சரத்குமார் அவருடைய கட்சி பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில் கமலுடன் இவர்கள் இருவரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் நேற்று உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொகுதி பங்கீடு
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்- ஐஜேகே- சமக கட்சியிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சென்னை வடபழனியில் கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி கே குமரவேல் முன்னிலையில் கையெழுத்தானது.

சமத்துவ மக்கள் கட்சி
ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த தொகுதி உடன்பாடு இவர்களிடையே நள்ளிரவு எட்டப்பட்டுவிட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications