சிங்கார சென்னையில் 'செத்துப்போன' ஆறுகள்.. விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம் தான்! மநீம எச்சரிக்கை!
சென்னை : சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் இல்லை
இதையொட்டி, தமிழ்நாட்டின் தலைநகரில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில், பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்குள்ள நீர் எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை
பக்கிங்காம் கால்வாயின் நிலையும் ஏறக்குறைய இதேதான். உண்மையில், குப்பை, கழிவுகளால் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் தண்ணீர் ஏற்கெனவே பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதி செய்துள்ளது. நகரமயமாக்கலின் விளைவுகளும், குப்பை மற்றும் கட்டிட, ரசாயன, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் இந்த நீர்நிலைகள் பெரிதும் மாசடைந்துள்ளன. சிங்காரச் சென்னை திட்டங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்தபோதும், எந்த மாற்றமும் நிகழவில்லை.

வெட்கக் கேடானது
நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்துகொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நீர்நிலைகளையே எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வது வெட்கக்கேடானது. இனியும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாசடையாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

விழிப்புணர்வு
அதேசமயம், பொதுமக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும். நீர்நிலைகள் நம் எல்லோருக்குமானது என்பதை உணர்ந்து, முடிந்த அளவுக்கு நீர்நிலைகளை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி, பொதுமக்களும், தன்னார்வலர்களும் இணைந்து மரணித்துக் கொண்டிருக்கும் நீர்நிலைகளை உயிர்ப்பிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என கூறியுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications