விநாயகர் சிலைக்கு காவல் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு
செங்கல்பட்டு: விநாயகர் சிலைக்கு காவல் இருந்த இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை செங்கல்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
முன்விரோதத்தால் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. எனினும், சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும், இரு வேறு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக, வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு முழுவதுமே விநாயகர் சதுர்த்தி தினத்தில் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், செங்கல்பட்டில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பாரதபுரம் பகுதியில் பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை, புனஸ்காரங்களை செய்து படையல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து, விநாயகர் சிலையை யாரும் சேதப்படுத்திவிட கூடாது என்பதற்காக பாரதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா (25), கார்த்திக், மோகன் ராஜ் ஆகியோர் காவலுக்கு இருந்தனர். நள்ளிரவை தாண்டிவிட்டதால் கார்த்திக், மோகன்ராஜ் சற்று கண் அசந்துவிட்டதாக தெரிகிறது. ராஜேஷ் கண்ணா மட்டும் விநாயகர் சிலை இருக்கும் இடத்தை சுற்றி வந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பாக மாறவே, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜேஷ் கண்ணாவை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
ராஜேஷ் கண்ணாவின் அலறல் சத்தத்தை கேட்ட கார்த்திக்கும், மோகன் ராஜும் அங்கு வந்து பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஷ் கண்ணா உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் போலீஸார் அங்கு வந்து ஊர் மக்களை சமாதானப்படுத்தி, ராஜேஷ் கண்ணாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க செங்கல்பட்டு சுற்றுப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுப்டடுள்ளனர்.
-
பனை விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் 'திடீர்' ட்விஸ்ட்.. வெளியான சிசிடிவி காட்சி! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications