AI ஆதிக்கம் இன்னும் முடியல.. Layoffs தொடராலம்! சிம்பாலிக்காக சொல்லும் மைக்ரோசாப்ட்
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), ஐடி துறையில் ஏராளமான வேலைகளை பறித்திருக்கிறது. இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள், AI மூலமான பணி நீக்கங்கள் மேலும் தொடரலாம் என்கிற அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு 15,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது தங்களது ஊழியர்களுக்கான நாளிதழ் மற்றும் நூலக சந்தாக்களை ரத்து செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கற்றலுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதே இதன் காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த பல மாதங்களாகவே மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கணிசமாக முதலீடு செய்கிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 15,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது ஊழியர்களுக்கான நாளிதழ் மற்றும் நூலக அணுகலைக் குறைத்துள்ளது.
'தி வெர்ஜ்' அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு நவம்பரில் செய்திச் சந்தாக்களை ரத்து செய்யத் தொடங்கியது. பல வெளியீட்டாளர்களுக்கு தானியங்கி ரத்து அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. "தற்போதைய எந்த ஒப்பந்தத்தையும் அதன் காலாவதி தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப் போவதில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பே இது, என மைக்ரோசாப்ட் மின்னஞ்சலில் குறிப்பிட்டது.
இம்மாற்றங்களில் 'ஸ்ட்ராடஜிக் நியூஸ் சர்வீஸ் (SNS)' உடனான மைக்ரோசாஃப்ட்டின் உறவு முடிவுக்கு வருவது முக்கியம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, 2,20,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு SNS உலகளாவிய அறிக்கைகளை வழங்கியது. மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு SNS அனுப்பிய தகவலில், "Microsoft அனைத்து நூலக ஒப்பந்தங்களையும் நிறுத்தப் போவதாக ஒரு தானியங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் உங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியமான SNS Global Report அடங்கும்," எனத் தெரிவித்தது.
அதேபோல ஊழியர்கள் "தி இன்ஃபர்மேஷன்" போன்ற வணிக வெளியீடுகளுக்கான டிஜிட்டல் அணுகலை இழந்துள்ளதாகவும், மைக்ரோசாப்ட் நூலகத்தில் இருந்து வணிகப் புத்தகங்களைப் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட்டின் இந்த மாற்றங்கள் செலவுக் குறைப்புடன், செயற்கை நுண்ணறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பெரிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா, AI சார்ந்த அணுகுமுறைக்கான மாற்றத்திற்குத் தலைமை தாங்குகிறார். இம்மாற்றத்திற்கு ஒத்துழைக்காத மூத்த நிர்வாகிகளுக்கு, நிறுவனத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications