Microsoft: இந்தியாவுக்கு ஜாக்பாட்! கூகுளை தொடர்ந்து களமிறங்கியது மைக்ரோசாப்ட்.. ரூ.1.57 லட்சம் முதலீடு செய்கிறது
சென்னை: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இது தான் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் பிரமாண்டமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாப்டும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்கான முதலீடு ஆகியவற்றில் ரூ.1.57 லட்சம் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அதிக வேலைவாய்ப்புகள்
ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுவேயாகும். ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் பிரமாண்டமாக முதலீடு செய்ய உள்ள நிலையில், அடுத்ததாக மைக்ரோசாப்ட்டும் களமிறங்கியுள்ளது.. உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் முதலீட்டை அறிவித்துள்ளது.
இந்த முதலீடுகளால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்யநாதெல்லா அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மைக்ரோசாப்ட். தகவல் தொழில் நுட்ப துறையில் உலக அளவில் பெரும் ஜாம்பவான் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா உள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர்.
பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில், மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ, சத்ய நாதெல்லா வெளியிட்டார். இது தொடர்பாக சத்ய நாதெல்லா கூறுகையில், ஆசியாவிலெயே பெரிய முதலீடாக ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டை இந்தியாவில் செய்ய மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி ட்வீட்
செயற்கை நுண்ணறிவு துறை மேம்பாடு மற்றும் திறன் ஆகிய துறையை நோக்கி இந்த முதலீடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றியையும் தனது எக்ஸ் பதிவில் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். சத்ய நாதெல்லாவின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சத்ய நாதெல்லாவுடன் ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது. ஆசியாவில் மிகப்பெரிய முதலீட்டை மைக்ரோசாப்ட் இந்தியாவில் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் புதுமை மற்றும் திறன் கொண்ட இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
கூகுள் தரவு மையம்
ஏற்கனவே இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் தனது மிகப்பெரிய தரவு மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்து 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுளின் தரவு மையம் அமைய உள்ளது.
அமேசான் நிறுவனமும், இந்தியாவில் தரவு மையம் அமைக்க பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சிப் உற்பத்தி செய்யும் Qualcomm நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியோனோ ஆர். அமோனை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் ஏஐ தொழில் நுட்பத்தின் மேம்பாடு மற்றும் புதுமை திறன் ஆகியவை தொடர்பாக இருவரும் ஆலோசித்து இருந்தனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications